எனக்கான நியாயங்களை வகுத்து
நான் மட்டுமே பயணிக்கும்
என் பாதையில்
மலர்வனங்களோடு முட்வேலிகளும்
என்னை களிப்பூட்ட,
திகைக்க வைப்பவை
நான் அறியா திசைகளிலிருந்தும்
நான் அறியா மனங்களிலிருந்தும்
முட்பாணங்களாய்ப் பாய்ந்து வரும்
ஆயிரம் கேள்விகளே..
மாபெரும் யுத்தங்களில் உயிர்கொண்ட
ஆயுதங்களையே வெல்லும் ஆபத்தான
இக்கேள்விகளுக்குள்
மீண்டும் மீண்டும் புகுந்து சென்று
எதையென்று தெரியாமல்
தேடத்தான் முயல்கிறேன்..
அவரவர்கான கேள்விகளுக்கு
அவரவர் தீர்மானித்த விடைகளையே
எதிர்நோக்குமிடத்தில்
என் தேடலின் பயன் தானென்ன?
எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர...
.........................................................................................................................நண்றி வேதா
No comments:
Post a Comment